நவராத்திரி ஆறாம் நாள் காத்தியாயனி பூஜை
நவராத்திரியின் ஆறாம் நாள் காத்தியாயனி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவர் துர்கையின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறார். தீய சக்திகளை அழிக்கும் வல்லமை படைத்தவள். காத்தியாயனி அம்மனை வழிபட்டால் தைரியம், பாதுகாப்பு, குடும்ப வளம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாளில் சிவப்பு பூக்கள், குங்குமம், மஞ்சள், வெல்ல இனிப்பு கொண்டு பூஜை செய்வது சிறப்பு. துர்கா கவசம் அல்லது காத்தியாயனி ஸ்லோகங்கள் ஜெபிக்கப்படுகின்றன. திருமண வளம், நல்ல துணைவன், குடும்ப நலன் வேண்டி இளம்பெண்கள் பெரிதும் வழிபடுகின்றனர்.

No comments:
Post a Comment