Thursday, February 19, 2026

கன்னி ராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சி பலன் – முழுமையான விளக்கம்


 

கன்னி ராசிக்காரர்களுக்கு குருப் பெயர்ச்சி பலன் – முழுமையான விளக்கம்

கன்னி ராசிக்காரர்களே! யாரு எந்தச் சந்தேகம் கேட்டாலும் பளிச்சுன்னு பதில் சொல்லும் அறிவு, ஆராய்ச்சி திறன் உங்களோட பெரிய பலம். எல்லாத்துக்கும் தீர்வு சொல்லக்கூடிய நாட்டு வக்கீல் மாதிரி பேசுவீங்க. கடந்த ஒரு வருடமாக ஒன்பதாம் வீட்டில் இருந்த குரு பகவான் உங்களுக்கு ஓரளவு யோகபலன் கொடுத்திருந்தார். இப்போது குரு பத்தாம் வீட்டுக்கு வந்திருப்பதால், உத்தியோகத்தில் பொறுமையும் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமும் அவசியமாகிறது. செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையில்லாத விவாதங்களைத் தவிர்க்கவும்.

பத்து ஆண்டுகளாக நல்லவர்களாக இருந்த சிலர் தங்களது குடும்ப சூழ்நிலைகளால் விலகிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் புதியவர்களுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும். உத்தியோகத்தில் மறைமுக மரியாதைக் குறைவு அல்லது இடமாற்றம் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். ஆனால் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 5 வரை குரு பகவான் வக்ரகதியில் பதினோராம் லாபஸ்தானத்திற்கு வருவதால் அந்த காலகட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி காண முடியும்.

நட்சத்திர அடிப்படையில் பார்த்தால், உத்திரம் நட்சத்திரத்தார்களுக்கு சின்னச் சின்ன செலவுகள், அலைச்சல்கள் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தார்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி மிகவும் அமோகமானது. சித்திரை நட்சத்திரத்தார்களுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் குரு பகவானின் பார்வை மிகவும் நல்ல நிலையில் உள்ளது. அவர் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் குடும்ப அமைதி திரும்பும், கணவன்-மனைவி உறவு வலுப்படும், பணவரவு நிலையாக இருக்கும். நாலாம் வீட்டின் மீது பார்வை விழுவதால் வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உருவாகும்; சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். ஆறாம் வீட்டின் மீது பார்வை இருப்பதால் பழைய சண்டை, கோர்ட் கேஸ்கள் சமாதானமாக முடியும்.

வியாபாரத்தில் லாபம் இருக்கும். ஆனால் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொழிலை தனியாகத் தொடங்கினால் வெற்றி அதிகம். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கிடைக்கும்; திருமண யோகம் உருவாகும். சிலர் தேவையில்லாமல் குற்றச்சாட்டு சொல்லலாம்; அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டால் முன்னேற்றம் தடைப்படாது. மொத்தத்தில், குரு பத்தாம் வீட்டில் இருந்தாலும் அவர் பார்ப்பிடங்கள் நல்ல பலன் தருவதால் இந்தக் காலம் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

பரிகாரம்

இந்த குருப் பெயர்ச்சி மேலும் யோகமாக அமைய, ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோவில் (திருவையாறு, தஞ்சாவூர் அருகில்) சென்று ஒரு வியாழக்கிழமை தரிசனம் செய்யுங்கள். மலை வாழைப்பழம் தானமாக வழங்குங்கள். இது குருபகவானின் அருளை அதிகரித்து, வாழ்க்கையில் நன்மைகள் பலப்பட உதவும்.


                                    📲 WhatsApp 📲 Contact via WhatsAp

No comments:

Post a Comment